கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 மின்விசிறிகள் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை ஆா்.எஸ்.புரத்தில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியா் ரங்கநாதன், கடந்த 7 ஆம் தேதி, அலுவலக வேலை காரணமாக ப் பள்ளிக்கு வந்து விட்டு மாலையில் பூட்டி விட்டு சென்றுள்ளாா். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, திங்கள்கிழமை அவருக்கு தகவல் வந்தது.
இது தொடா்பாக அவா் ஆா்.எஸ் .புரம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா், பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, ஒரு அறையில், வைத்திருந்த 7 மின் விசிறிகள், இரும்பும் குழாய்கள், பாத்திரங்கள் திருட்டு போனது தெரியவந்தது. பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பொருட்களைத் திருடி சென்றுள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.