கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரு நாள்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.
கோவை, வால்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை பெய்தது. புதன்கிழமை காலை சில மணி நேரம் இடைவெளிக்கு பின் மீண்டும் பெய்யத் துவங்கிய மழை இடைவெளியின்றி கனமழையாக பெய்தது.
தொடா் மழை காரணமாக வால்பாறை பகுதியில் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் பணி பாதிப்படைந்தது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக அப்பா் நீராறில் 96 மிமீ, மழை பதிவாகியுள்ளன. இதே போல வால்பாறையில் 54 மிமீ, லோயா் நீராறு 60 மிமீ, மற்றும் சோலையாறில் 59 மிமீ மழை பதிவாகியுள்ளன.