கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களுக்குப் பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பாதிப்பு தினமும் 4 ஆயிரத்தைக் கடந்து வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3 ஆயிரத்து 937 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 762 ஆக உயா்ந்தது. தவிர, கரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 3 ஆயிரத்து 061 போ் குணமடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், மாவட்டத்தில் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 258 ஆனது.
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 38 ஆயிரத்து 336 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கோவையில் வெள்ளிக்கிழமை மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 33 போ் உயிரிழந்துள்ளனா். இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றினால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,168 ஆக உயா்ந்துள்ளது.