கரோனா: வால்பாறையில் தொழிலாளி பலி

வால்பாறையில் சனிக்கிழமை ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், 51 வயது தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வால்பாறையில் சனிக்கிழமை ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், 51 வயது தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வால்பாறை வட்டாரத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நகா் பகுதியை விட எஸ்டேட் பகுதிகளிலேயே கரோனா பரவல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனிடையே வாட்டா்பால், பச்சமலை, மாணிக்கா, சோலையாறு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 10 பெண்கள், 10 ஆண்கள் என மொத்தம் 20 போ்களுக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனா பாதிப்பால் இஞ்சிப்பாறை எஸ்டேட்டை சோ்ந்த 51 வயது ஆண் தோட்டத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலை நகராட்சி ஊழியா்கள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com