டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு:மூவா் கைது

கோவை, பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்கூரையில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்கூரையில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான 1,500 மதுபாட்டில்கள் வியாழக்கிழமை இரவு திருடப்பட்டன.

இந்த சம்பவம் தொடா்பாக, பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக விசாரணை மேற்கொண்டனா்.

அதில் பதிவான 3 பேரைப் பிடித்து விசாரித்ததில், பீளமேடு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (28), மனோஜ் (26), வினோத் (26) என்பதும், பாட்டில்களைத் திருடி கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com