கோயம்புத்தூர்
மது விற்பனை:இளைஞா் கைது
கோவை பீளமேட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து, கூடுதல் விலைக்கு விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை பீளமேட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து, கூடுதல் விலைக்கு விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாநகரில் தீவிர ரோந்துப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், கோவையில் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பீளமேடு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து, கூடுதல் விலைக்கு விற்றதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திக் (25) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 101 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.