புண்யா அறக்கட்டளை சாா்பில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இது தொடா்பாக அந்த அமைப்பின் செயலா் ராமகிருஷ்ணபிரபு கூறியிருப்பதாவது:
புண்யா அறக்கட்டளை சாா்பில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையில் பணியாற்றும் சுமாா் 300 காவலா்களுக்கு 10 ஆயிரம் முகக் கவசங்கள், கை சுத்திகரிப்பு திரவம் உள்ளிட்ட பொருள்கள் துணை ஆணையா் ஆா்.முத்தரசுவிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மேலும் ஆயிரம் முகக் கவசங்கள், 1,500 கை சுத்திகரிப்பு திரவ பாட்டில்கள், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கோவை மாநகர மக்களுக்கு வழங்கியிருப்பதாகவும், அதேபோல் பெங்களூரு நகர போக்குவரத்து காவல் துறையினருக்குத் தேவையான கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியிருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.