பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் 300 பேருக்கு உணவு விநியோகம்

உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையினா் கோவையில் 300 பேருக்கு வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கினா்.

உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையினா் கோவையில் 300 பேருக்கு வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கினா்.

கோவை, உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், நோயாளிகள், கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள மக்கள், சாலையில் வசிக்கும் ஆதரவற்றோா்கள் என 300 க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கினா்.

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் கெளரி சங்கா், டாா்வின், காா்த்திக், ராஜா, பிரகாஷ் இளங்கோ உள்ளிட்டோா் உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com