சோமனூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (மே 31) காலை 9.30 முதல் முற்பகல் 11 மணி வரையில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொன்னாண்டாம்பாளையம், பொத்தியாம்பாளையம், நீலாம்பூா் பிரதான சாலை, அண்ணா நகா், என்.பி.எஸ்.நகா்.