அய்யா்பாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தாய்முடி உயரழுத்த மின் பாதையின் ஒரு பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: தோணிமுடி, பன்னிமேடு ஆகிய எஸ்டேட் பகுதிகள்.