கோவையில் பரவலாக மழை

கோவையில் நகரின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

கோவையில் நகரின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், கோவை, திருப்பூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

சௌரிபாளையம், ராமநாதபுரம், உக்கடம், காந்திபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து இரவு வரை மழை நீடித்தது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தீபாவளி பண்டிகைக்கு பொருள்கள் வாங்க வந்த மக்கள் மழையால் சிரமங்களுக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com