கோவை: அதிகளவில் மது அருந்திய மூவர் சாவு

கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர்கள் பார்த்தீபன் (31) , சக்திவேல் (60) முருகானந்தம் (55). பார்த்தீபன் மற்றும் சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
அதிகளவில் மது அருந்திய மூவர் சாவு
அதிகளவில் மது அருந்திய மூவர் சாவு

கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர்கள் பார்த்தீபன் (31) , சக்திவேல் (60) முருகானந்தம் (55). பார்த்தீபன் மற்றும் சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

தென்காசியைச் சேர்ந்த முருகானந்தம் இப்பகுதியில் தங்கி சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். நண்பர்களான மூவரும்  தீபாவளியைக் கொண்டாடுவதற்காக புதன்கிழமை மாலை மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை 6.30 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழுபாட்டில் மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர். இதனையடுத்து அருந்ததியர் வீதியிலுள்ள, பட்டத்தரசிய்யம்மன் கோயில் எதிரே இருக்கும் , பாழடைந்த கட்டடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் சக்திவேல் தனது வீட்டுக்கு செல்ல கோயிலின் பின்புறம் வந்தவர் , கீழே உட்கார்ந்து இறந்துவிட்டார். இவரை தொடர்ந்து பாரதியார் சாலையில் சென்ற முருகானந்தம் இறந்துள்ளார். இருவரது உடல்களும் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில்  பார்த்தீபன் தனது வீட்டருகே இறந்துள்ளார்.

பின்னர் அவரது உடலும்  பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியிலுள்ள தடயங்களை எடுத்துச்சென்றனர். ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் மது அருந்திய மூன்று பேர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com