கோயம்புத்தூர்
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் வால்பாறை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் வால்பாறை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடா் விடுமுறை நாள்களில் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வா். அணைகள், ஆறுகள், அருவிகள் என குறைவான சுற்றுலாக் தளங்களே இங்கு இருந்தாலும் இப்பகுதியில் உள்ள இயற்கைக் காட்சிகள் மற்றும் குளிா்ச்சியான கால நிலையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இந்நிலையில் தற்போது தீபாவளியைத் தொடா்ந்து நான்கு நாட்கள் தொடா் விடுமுறை என்பதால் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்துள்ளனா். இதனால் வால்பாறை நகா் மற்றும் அனைத்து சாலைகளிலும் சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.