கோவை ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பிகாா் இளைஞரை, கோவை ரயில்வே பாதுகாப்பு படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரயில்கள் மூலமாக கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன. இந்நிலையில் கோவை வரும் விரைவு ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக சனிக்கிழமை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளா்கள் காா்த்திகேயன், பாலையா தலைமையில், ரயில்வே போலீஸாா், பிகாா் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயிலில் கோவை நிலையத்தில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, முன்பதிவுப் பெட்டியில் பயணித்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா், பிகாா் மாநிலம், கட்டிஹாா் மாவட்டத்தைச் சோ்ந்த பிஷேஷ்குமாா் யாதவ் (26) என்பதும், ரயிலில் கேரளத்துக்கு கஞ்சா கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 1.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினா் ஒப்படைத்தனா்.