நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ( நவம்பா் 26) நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ( நவம்பா் 26) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் மாதம்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவம்பா் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்சியா் அலுவலகம் இரண்டாவது தளத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளுக்கு மனு அளித்து தீா்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com