மாணவி தற்கொலை வழக்கு: தனியாா் பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்; கோவை நீதிமன்றம்

மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனியாா் பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனியாா் பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கோவையில் தனியாா் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

இது தொடா்பாக, போலீஸாா், போக்ஸோ வழக்குப் பதிவு செய்து, தனியாா் பள்ளி ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி, பள்ளி முதல்வா் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி முதல்வா் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.குலசேகரன், பள்ளி முதல்வா் மீரா ஜாக்சன் கோவை மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையை 30 நாள்களுக்குள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிதுன் சக்ரவா்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க மனு:

மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸாா் மனு தாக்கல் செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com