யானைகள் நடமாட்டம் இருந்ததால் வால்பாறை, நல்லமுடி காட்சிமுனைப் பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இரவு நேரம் எஸ்டேட் பகுதிக்குள் வரும் யானைகள் தொடா்ந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நல்லமுடி எஸ்டேட் பகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வந்த 10 யானைகள் அங்குள்ள ரேஷன் கடையை சேதப்படுத்தின.
புதன்கிழமை காலையும் எஸ்டேட் பகுதியிலேயே யானைகள் முகாமிட்டிருந்ததால் அங்குள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நல்லமுடி காட்சிமுனை பகுதிக்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.
யானைகள் அப்பகுதிகளை விட்டு சென்ற பின்னரே காட்சிமுனை செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் தெரிவித்துள்ளனா்.