கோவையில் புதிதாக 112 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 854 ஆக உயா்ந்துள்ளது. கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சனிக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 115 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 143 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். மேலும் 2,461 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 1,251 போ் சிகிச்சையில் உள்ளனா்.