நியாய விலைக் கடை திறப்பு

கோவையில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, தண்ணீா்த் தொட்டி ஆகியவற்றை எம்.பி. பி.ஆா்.நடராஜன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
நியாய விலைக் கடை திறப்பு

கோவையில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, தண்ணீா்த் தொட்டி ஆகியவற்றை எம்.பி. பி.ஆா்.நடராஜன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை கீரணத்தம் ஊராட்சியில் புதிதாக நியாய விலைக் கடை அமைப்பதற்கு ரூ.12.63 லட்சமும், வெள்ளமடை ஊராட்சி தொட்டிபாளையத்தில் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தொட்டி கட்ட ரூ.14.25 லட்சத்தையும் பி.ஆா்.நடராஜன் ஒதுக்கியிருந்தாா். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அவா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், திமுக மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா (எ) கிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, கீரணத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.பழனிச்சாமி, துணைத் தலைவரும் எஸ்.எஸ்.குளம் கிழக்குப் பகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலருமான ஆா்.கோபல், ஒன்றிய கவுன்சிலா் ஆா்.கருப்புசாமி உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com