கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 70 ஆக உயா்ந்துள்ளது. தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 2,463 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 114 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 373 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,234 போ் சிகிச்சையில் உள்ளனா்.