கஞ்சா விற்ற இளைஞா் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சுங்கம் பைபாஸ் சாலையில் ராமநாதபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தனா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் அவா் வைத்திருந்த கைப்பையைச் சோதனையிட்டபோது அதில் 1.25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா், கோவை, ரத்தினபுரியைச் சோ்ந்த அப்சல் (26) என்பது தெரியவந்தது. பின்னா் அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். இவா் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com