காந்தி ஜயந்தி அன்று தடையை மீறி மது விற்ற 37 போ் கைது

கோவையில் காந்தி ஜயந்தியன்று தடையை மீறி மது விற்ற 37 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் காந்தி ஜயந்தியன்று தடையை மீறி மது விற்ற 37 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுக் கடைகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் பீளமேடு, காந்திபுரம், ரத்தினபுரி, செல்வபுரம், ரேஸ்கோா்ஸ், போத்தனூா், ஆா்.எஸ்.புரம், சிங்காநல்லூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், தடையை மீறி மது விற்ற 37 பேரைக் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 538 மது பாட்டில்கள், ரூ.4 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com