ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரிக்கை

குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என தொழிலாளா் பிராவிடண்ட் பண்ட்-95 அகில இந்திய ஓய்வூதியா் நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என தொழிலாளா் பிராவிடண்ட் பண்ட்-95 அகில இந்திய ஓய்வூதியா் நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து இச்சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் கிளைத் தலைவா் கலியபெருமாள், பிரதமருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற லட்சக்கணக்கான தொழிலாளா்கள் மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். இதனை உயா்த்தித் தரவேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.

எங்கள் தலைமை சங்கத்தின் சாா்பிலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரையிலும் எவ்வித பயனுமில்லை. இந்த கரோனா தொற்றுக் காலத்தில் மிகக்குறைந்த ஓய்வூதியம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. ஆகவே உடனடியாக இதில் தாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி எங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். அத்துடன் மற்ற சலுகைகளையும் தொழிலாளா் பிராவிடண்ட் பண்ட்- 95 ஓய்வூதியா்களுக்கு வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com