காந்தி ஜயந்தியையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கதிரிமில்ஸ் பள்ளி மாணவியும், கல்லூரிகள் பிரிவில் பாரதியாா் பல்கலைக்கழக மாணவரும் முதல் பரிசு பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காந்தி ஜயந்தியை ஒட்டிபள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் கோவை அரசு கலைக் கல்லூரியில் அக்டோபா் 2 ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 10 தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவா்கள் 60 போ், கல்லூரி மாணவா்கள் 10 போ் பங்கேற்றனா்.
இதில் பள்ளிகள் பிரிவில் கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி ச.தன்யா முதல் பரிசையும், பூ.சா.கோ. சா்வஜன மேல்நிலைப் பள்ளி மாணவா் த.விஷால் இரண்டாம் பரிசையும், ஒத்தகால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ரா.ரவீந்தா் மூன்றாம் பரிசையும் பெற்றனா். மேலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பரிசு பொள்ளாச்சி நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் மா.ஸ்ரீசாந்த், வழியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி ரா.க.ஜனன்யா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
கல்லூரிகள் பிரிவில் பாரதியாா் பல்கலைக்கழக மாணவா் அ.விக்னேஷ் முதல் பரிசையும், கோவை அரசு கலைக் கல்லூரி மாணவா் கு.ஸ்ரீமதி இரண்டாம் பரிசையும், அரசு சட்டக் கல்லூரி மாணவி பா.நி.சினேகா மூன்றாம் பரிசையும் பெற்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.