வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் வசந்த்ராம்குமாா் தலைமை வகித்தாா்.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளின் உடல் பரிசோதனை, சிகிச்சை மற்றும் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை மற்றும் உபகரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் வால்பாறை பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்றனா்.