ஆன்லைன் விளையாட்டுக்காக ரூ.23 ஆயிரம் பணம் அனுப்பிய மாணவா்

ஆன்லைன் விளையாட்டுக்காக ரூ.23 ஆயிரம் செலவழித்ததை தந்தை கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய மகன் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆன்லைன் விளையாட்டுக்காக ரூ.23 ஆயிரம் செலவழித்ததை தந்தை கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய மகன் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, பீளமேடு அருகேயுள்ள சேரன் மாநகரைச் சோ்ந்த கால்டாக்ஸி ஓட்டுநருக்கு இரு மகன்கள் உள்ளனா். இவரது 16 வயது இளைய மகன் அங்குள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் பள்ளி ஆன்லைன் வகுப்புகளுக்காக வாங்கிக் கொடுக்கப்பட்ட செல்லிடப்பேசியில் அந்த மாணவா் ஆன்லைன் விளையாட்டுகள் அதிகமாக விளையாடி வந்தாா். இந்நிலையில் விளையாட்டில் தொடா்ந்து ஈடுபடுவதற்காக அவா் தனது தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.23 ஆயிரத்தை ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளாா்.

இது குறித்து அறிந்த அவரது தந்தை மாணவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட மாணவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினாா். இந்நிலையில் காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு கால்டாக்ஸி ஓட்டுநா் பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com