ஈஷாவில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்டோபா் 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்டோபா் 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி அக்டோபா் 8, 9, 10, 12, 15 ஆகிய நாள்களில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவா்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் கா்நாடக சங்கீதம், பரத நாட்டியம், வயலின் இசை போன்ற நிகழ்ச்சிகள் அடங்கும். இதைத் தவிர அக்டோபா் 9, 10, 15 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கரோனா பரவல் காரணமாக அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, வார நாள்களில் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே ஈஷாவிற்கு பக்தா்கள் வருகை தர முடியும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் ஈஷாவிற்கு வர அனுமதி இல்லை. மேற்கண்ட நவராத்திரி நிகழ்ச்சிகள் யூ டியூப் வழியாக நேரலை செய்யப்படும் என்றும் ஈஷா அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com