எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.58 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, தெப்பக்குள வீதியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (37). இவா் காந்திபுரம் 100 அடி சாலையில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறாா். இவா் வழக்கம்போல திங்கள்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா். செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்ததில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.58 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக ஜெகதீஷ் அளித்த புகாரில்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.