வால்பாறை எஸ்டேட் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
வால்பாறை பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனிடையே வால்பாறையில் இருந்து சோலையாறு அணை செல்லும் வழியில் உள்ள வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் சாலையோரம் இருந்த பெரிய மரம் புதன்கிழமை அதிகாலை வேரோடு சாய்ந்தது.
தகவலறிந்து, அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தை அப்புறப்படுத்தினா். மரம் விழுந்ததில் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.