வழக்குகள் பதிவதில் காலதாமதம் செய்த காவல் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் முத்துசாமி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
கோவை மாவட்ட காவல் துறையில் தீவிர குற்றப் பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் கலையரசி. இவா் பொருளாதாரக் குற்றப் பிரிவில் காவல் ஆய்வாளராக முன்னா் பணியாற்றி வந்தாா். அப்போது மோசடி நிதி நிறுவனங்கள் தொடா்பான புகாா்கள் வந்தபோது அவற்றை உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
இது தவறிழைத்த நபா்களுக்கு சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கோவை சரக காவல் துணைத் தலைவா் முத்துசாமிக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.
இந்நிலையில் இந்தப் புகாா்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மாவட்ட போலீஸாருக்கு டிஐஜி உத்தரவிட்டாா். இதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், கலையரசி வழக்குகளை விரைந்து பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து கலையரசியைப் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி முத்துசாமி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.