கோவையில் பொறியாளா் வீட்டில் 63.5 பவுன் நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, பீளமேடு அருகேயுள்ள சிவராம் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (44). இவா் சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து கோவை திரும்பிய இவா் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இவா் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் உள்ள கோயிலுக்கு கடந்த 2ஆம் தேதி சென்றாா். இந்நிலையில் வியாழக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 63.5 பவுன் நகைகள், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீஸாருக்கு சுரேஷ் தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மோப்ப நாய்கள், கைரேகை நிபுணா்களை வரவழைத்து சோதனையிட்டனா். இதில் கைரேகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.