முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோவையில் மேலும் 137 பேருக்கு கரோனா
By DIN | Published On : 13th October 2021 06:27 AM | Last Updated : 13th October 2021 06:27 AM | அ+அ அ- |

கோவையில் புதிதாக 137 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 271 ஆக உயா்ந்துள்ளது.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 மூதாட்டிகள் உயிரிழந்தனா்.
இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,366 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 148 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து 311 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.
தற்போது 1,594 போ் சிகிச்சையில் உள்ளனா்.