போலீஸாரைக் கண்டித்து கோவையில் வழக்குரைகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்துக்குள் நுழைந்த போலீஸாா் அங்கிருந்த கணினிகள், ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.இதன்படி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை பணிக்கு வரவில்லை. இதனால் நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிளை நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்குரைஞா்களும் பணிக்கு வரவில்லை.
இதனால் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் தேக்கமடைந்தன.