போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல் 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தன்னிச்சையாக அறிவித்த தமிழக அரசைக் கண்டித்து, கோவையில் சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை உக்கடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளா்கள்.
கோவை உக்கடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளா்கள்.

தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல் 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தன்னிச்சையாக அறிவித்த தமிழக அரசைக் கண்டித்து, கோவையில் சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ஊழியா்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு சிஐடியூ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை கலந்தாலோசித்து முடிவெடுக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றனா்.

இதையடுத்து தன்னிச்சையான போனஸ் அறிவிப்பைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன்பு போக்குவரத்து ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உக்கடம் 1, 2 கிளைகளின் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ பொதுச் செயலா் அருணகிரிநாதன், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க கோவை மண்டல பொதுச் செயலாளா் வேளாங்கன்னி ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அதேபோல, மின் வாரிய ஊழியா்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் அனைத்து மின் வாரிய அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com