கோவையில் 5 தனியாா் மருத்துவமனைகளில் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு நாள்தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தவிர மாவட்டத்தில் உள்ள 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனைக்கு வரும் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போதுள்ள 33 ஆயிரத்து 813 கா்ப்பிணிகளில் 20 ஆயிரத்து 94 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச்., கொங்குநாடு மருத்துவமனை, டாக்டா் முத்தூஸ் மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, கங்கா மருத்துவமனை ஆகிய 5 தனியாா் மருத்துவமனைகளில் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.