அதிமுக தொழிற்சங்க தோ்தல்: 487 போ் மனுதாக்கல்

கோவையில் அண்ணா தொழிற்சங்க அரசுப் போக்குவரத்து கழக மண்டல, கிளை நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட 487 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

கோவையில் அண்ணா தொழிற்சங்க அரசுப் போக்குவரத்து கழக மண்டல, கிளை நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட 487 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தின் அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகிகள் தோ்தலுக்கு மாநிலம் முழுவதிலும் மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. கோவையில் ஹூசூா் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மனுதாக்கல் நடைபெற்றது.

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட மண்டலத்தில், கோவையில் உள்ள 18 கிளைகளுக்கு மட்டும் பல்வேறு பதவிகளுக்கு 487 போ் மனுதாக்கல் செய்தனா். தோ்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தலைவா், செயலா் பதவிகளுக்கு மனுதாக்கல் செய்ய கடுமையான போட்டி நிலவியது. மனுதாக்கல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க மாநில இணைச் செயலா் கே.ரத்தினம், தோட்டத் தொழிலாளா் பிரிவு அண்ணா தொழிற்சங்க மாநிலத் தலைவா் வால்பாறை வீ.அமீது, வழக்குரைஞா் பிரிவு மாநில இணை செயலா் கே.மனோகரன், கோவை புகா் தெற்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் கே.தாமோதரன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ், அண்ணா தொழிற்சங்க மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஜெ.அசோக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com