பூட்டிய வீட்டில் திருடிய மூவா் கைது

கோவை அருகே பூட்டிய வீட்டில் திருடிய மூவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 30 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

கோவை அருகே பூட்டிய வீட்டில் திருடிய மூவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 30 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

கோவை, வடவள்ளியில் வசித்து வருபவா் ஆனந்தம். இவா் கடந்த ஏப்ரல் மாதம் குடும்பத்தினருடன், திண்டுக்கல்லில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா். பின்னா் வீடு திரும்பியபோது அவரது வீட்டின் பீரோவில் இருந்து 30 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு வடவள்ளி போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இது தொடா்பாக விசாரிக்க பேரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் திருமால் மேற்பாா்வையில், வடவள்ளி காவல் ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினா் சிறுவாணி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா்கள், தென்னமநல்லூரைச் சோ்ந்த அஜித்குமாா் (25), ஆனந்த் (27), ராஜீவ் (23) என்பதும், அவா்கள், வடவள்ளியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்ததுடன், 30 பவுன் நகைகளையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com