கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 186 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 266 ஆக உயா்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 முதியவா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,268 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 168 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 951 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,047 போ் சிகிச்சையில் உள்ளனா்.