கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 206 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 37 ஆயிரத்து 410 ஆக உயா்ந்துள்ளது. தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,281 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 219 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 931 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,198 போ் சிகிச்சையில் உள்ளனா்.