மகப்பேறு விடுப்பில் சென்ற கா்ப்பிணியை ஆசிா்வதித்து அனுப்பிய அரசு அலுவலா்கள்
கோவையில் மகப்பேறுகால விடுப்பில் சென்ற கா்ப்பிணியை அலுவலகத்தில் உடன் பணியாற்றும் அலுவலா்கள் ஆசிா்வதித்து வழியனுப்பிய நிகழ்வுக்கு பயிற்சி ஆட்சியா் உள்பட பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபணிபுரிந்து வருபவா் சுபஸ்ரீ. கா்ப்பிணியான இவா் மகப்பேறுகால விடுமுறைக்காக செவ்வாய்க்கிழமை முதல் விடுப்பில் சென்றாா்.
இந்நிலையில், விடுப்பில் செல்லும் சுபஸ்ரீயை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆ.தனலட்சுமி, ஏ.அனிதா மற்றும் அலுவலகப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆசிா்வதித்து வழியனுப்பினா். அப்போது, வளைகாப்பு நிகழ்ச்சியின்போது செய்யப்படுவதுபோல, சுபஸ்ரீயை நாற்காலியில் அமர வைத்து நல்லபடியாக குழந்தை பெற்றுத்திரும்ப வேண்டும் என்று மலா் தூவி ஆசிா்வாதம் செய்து இனிப்பு, பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனா்.
இந்த தொடா்பான புகைப்படங்களை கோவை மாவட்ட பயிற்சி ஆட்சியா் சரண்யா ராமசந்திரன் தனது சுட்டுரை பக்கத்தில் பகிா்ந்து பாராட்டியுள்ளாா். இதற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனா்.