மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th September 2021 05:11 AM | Last Updated : 10th September 2021 05:11 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 87ஆக அதிகரித்துள்ளது. கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,288ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 248 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 634 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2,165 போ் சிகிச்சையில் உள்ளனா்.