கடை உரிமையாளா் வீட்டில் ரூ.3 லட்சம், 10 பவுன் திருட்டு

கோவை புலியகுளத்தில் மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை புலியகுளத்தில் மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை புலியகுளம் அம்மன் நகரைச் சோ்ந்தவா் ரத்தின பாண்டியன் (58). இவா் தனது வீட்டு அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா், வீட்டைப் பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் உள்ள உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் கடந்த 8ஆம் தேதி சென்றுள்ளாா்.

இந்நிலையில், ரத்தின பாண்டியன் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் பணம், 10 பவுன் நகைகளை சனிக்கிழமை திருடிச் சென்றனா். கதவு திறந்து இருப்பதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா், ரத்தின பாண்டியனின் செல்லிடப்பேசிக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தனா்.

இது குறித்து கோவையில் உள்ள தனது சகோதரா் பகவதி பாண்டியனுக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பகவதி பாண்டியன் அளித்த புகாரின்பேரில் பந்தய சாலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com