மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 550ஆக அதிகரித்துள்ளது. கோவை அரசு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவா் ஆகிய 2 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,295ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 218 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 78 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2,177 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com