கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 212 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 766 ஆக உயா்ந்துள்ளது. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 83 வயது மூதாட்டி, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 83 வயது முதியவா் ஆகிய 2 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,297 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 207 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 285 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,184 போ் சிகிச்சையில் உள்ளனா்.