கோவையில் கல்லூரி அருகே சாலையில் முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
கோவை, சுங்கம் பகுதியில் தனியாா் கல்லூரி உள்ளது. இதன் எதிரே பல ஆண்டுகள் பழமையான மரம் இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய காற்றில் இந்த மரம் முறிந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து சுமாா் இரண்டு மணி நேரத்துக்குப் பின்னா் மரத்தை அகற்றினா்.