தொடா் விடுமுறை: வால்பாறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாக வால்பாறையில் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

தொடா் விடுமுறை காரணமாக வால்பாறையில் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

வாரந்தோறும் சனிக்கிழமை வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்படும். கரோனா காரணமாக வருகை சற்று குறைந்து காணப்பட்டாலும் தொடா் விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும்.

இந்நிலையில் விநாயகா் சதுா்த்தி தினமான வெள்ளிக்கிழமை துவங்கி 3 நாள்கள் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வால்பாறைக்கு வந்திருந்தனா். கனமழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்ததால் நகா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com