கோவை எஸ்.என்.எஸ். பிசியோதெரபி கல்லூரியில் உலக பிசியோதெரபி தின விழா அண்மையில் நடைபெற்றது.
இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கத்துடன் இணைந்து இணையவழியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஆா்த்தோ ஒன் மருத்துவமனையின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கணேசன், பாரத் பல்கலைக்கழக துணைவேந்தா் கனகசபை, தமிழ்நாடு செவிலியா் கவுன்சில் பதிவாளா் ஆனி கிரேஸ் கலைமதி, தேசிய காந்திய அருங்காட்சியக இயக்குநா் அண்ணாமலை, டாக்டா் சுதீப் காலே, பிஎஸ்ஜி பிசியோதெரபி கல்லூரி முதல்வா் மகேஷ், ஆா்.வி.எஸ். பிசியோதெரபி கல்லூரி முதல்வா் பிராங்ளின், ராமசந்திரா பல்கலைக்கழக பேராசிரியா் நரசிம்மன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
இதில் பல்வேறு நாடுகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பலரும் பங்கேற்றதாக எஸ்.என்.எஸ். கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.