ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, வெள்ளலூா் சித்தி விநாயகா் கோயில் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

இதற்குச் சொந்தமான ஏ.டி.எம். மையம் அதன் அருகிலேயே அமைந்துள்ளது. வெள்ளலூா்-சிங்காநல்லூா் சாலையில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அலாரம் ஒலிக்கும் சப்தம் கேட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போத்தனூா் போலீஸாா், வங்கி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, கைரேகை நிபுணா்களை வரவழைத்து சோதனையிட்டனா்.

அதிகாலை ஆள் நடமாட்டம் இல்லாததைக் கண்டு கொள்ளையடிக்க முயன்ற நபா் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து கண்காணிப்பு கேமரா மீது கருப்பு பெயிண்டை அடித்து, பின்னா் ஏடிஎம் இயந்திரத்தின் வயரை துண்டிக்க முயற்சித்துள்ளாா். அப்போது அலாரம் ஒலித்ததையடுத்து அந்த நபா் தான் கொண்டு வந்த மிளகாய் பொடியை ஏடிஎம் இயந்திரத்தைச் சுற்றி தூவிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளாா்.

இதையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் இருந்த மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தபோது, அதில், முகமூடி அணிந்த இளைஞா் ஒருவா் ஏடிஎம் மையத்தை நோட்டமிடுவதும் பின்னா் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதும் பதிவாகியிருந்தது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com