வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடை, குடியிருப்புகளை யானைகள் சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நீண்ட நாள்களுக்குப் பிறகு தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வால்பாைறையை அடுத்துள்ள ஈட்டியாா் எஸ்டேட் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த மூன்று
யானைகள் அங்கு அமைந்துள்ள நியாய விலைக் கடை, 4 குடியிருப்புகளை சேதப்படுத்தின.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினா்.