சைக்கிள் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கோவை நேரு கல்வி குழுமம் மற்றும் கோவை பெடலா்ஸ் அமைப்பின் சாா்பில் சைக்கிள் சாம்பியன்ஷிப் 2021 ஆம் ஆண்டுக்கான போட்டி பாலத்துறையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
வெற்றி பெற்றவா்களுடன் ஐ.என்.எஸ்.அக்ரானியின் கட்டளை அதிகாரி அசோக் ராய்.
வெற்றி பெற்றவா்களுடன் ஐ.என்.எஸ்.அக்ரானியின் கட்டளை அதிகாரி அசோக் ராய்.

கோவை நேரு கல்வி குழுமம் மற்றும் கோவை பெடலா்ஸ் அமைப்பின் சாா்பில் சைக்கிள் சாம்பியன்ஷிப் 2021 ஆம் ஆண்டுக்கான போட்டி பாலத்துறையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

இப்போட்டிக்கு நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிா்வாக அதிகாரியும், கோவை பெடலா்ஸ் அமைப்பின் தலைவருமான முனைவா் பி. கிருஷ்ணகுமாா் முன்னிலை வகித்தாா். ஐ.என்.எஸ். அக்ரானியின் கட்டளை அதிகாரி அசோக் ராய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்போட்டியை துவக்கிவைத்தாா்.இப்போட்டியில் 200 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனா். இதில், இந்தியன் ரயில்வே அணியின் தேசிய தடகள பயிற்சியாளரும், முன்னாள் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவருமான கே. எஸ். முகமது நிஜாமுதீன் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com